மணப்பாறை: கிணற்று சகதியில் சிக்கியவர் பரிதாப பலி

6319பார்த்தது
வையம்பட்டி அருகே மண்பத்தையை சேர்ந்த ஜான் வில்லியம். இவர் நேற்று காலை 11 மணியளவில் அவருக்கு சொந்தமான வட்ட கிணற்றில் மோட்டார் பழுது வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தன்னிச்சையாக கிணற்றில் விழுந்ததில் சகதியில் மாட்டி கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் ஜான் வில்லியம் உடலை மீட்டு மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி