சமயபுரம்: ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

51பார்த்தது
சமயபுரம்: ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
சமயபுரம் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் சுமதி தம்பதியினரின் மகள் கவுசிகா வயது 11 அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். 

கணவன் மனைவி இருவரும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் கௌசிகா தனது அண்ணனுடன் வீட்டில் தங்கி இருந்தாள். வெளியே சென்று இருந்த அண்ணன் வீடு திரும்பி வந்து பார்த்தபொழுது கவுசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சமயபுரம் போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி