உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் அமயபுரம் ஊராட்சி சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.