திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வ. உ. சி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தொடர்ந்து புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரது மனைவி உமாதேவி பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் தனது கணவரை காணவில்லை என உமாபதி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான நபரை தேடி வருகின்றனர்.