துறையூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

50பார்த்தது
துறையூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தா. பாதர்பேட்டை மேற்கு காட்டுக் கொட்டகையைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் கிருஷ்ணசாமி வயது (34) இவர் தனது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க மரம் ஏறினார். அப்போது மரத்தில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து அவர் கீழே தவறி விழுந்தார். 

இதில் அவருக்கு இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி