குடும்பத்தகராறில் ஏற்பட்ட காயத்துடன் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கே கே நகர் இபி காலனி சிற்பி நகரை சேர்ந்த (35) வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று (மார்ச்.17) உடலில் காயங்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் இடம் புகார் அளிக்க வந்திருந்தார் அவர் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது.எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் அங்கு அவருக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தகராறு ஏற்பட்டு வருகிறது இந்நிலையில் இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை எனது கணவர் என்னை தாக்கினார்.
இதுகுறித்து பலமுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை இல்லை எனவே மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார் மனுவை பெற்றுக் கொண்டு போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.