திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே. என். நேரு, தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாக துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்த பின்பு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அந்த துறை சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. மொழி குறித்து கமல் சொன்னதில் எந்த தவறும் இல்லை. தமிழில் இருந்து தான் அனைத்து மொழியும் வந்தது அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை. நீதிபதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
. அதனால் அவர் பேசியது சரிதான். திமுக அரசு மீது எந்த குறையும் கூற முடியாததால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்பும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறை கூறுகிறார் என்றார்.