திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் சந்திரன் (45). இருசக்கர வாகனங்களுக்கு 'சீட் கவர்' தைக்கும் தொழில் செய்து வந்த இவர், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த சந்திரன் நேற்று (மார்ச் 18) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எடமலை பொலீஸ்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்