திருச்சி பச்சமலையில் அமைச்சர் கே. என். நேரு ஆய்வு

60பார்த்தது
திருச்சி பச்சமலையில் அமைச்சர் கே. என். நேரு ஆய்வு
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி மற்றும் துறையூர் பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் திருச்சிக்கு வருகை தந்துள்ளார். இதனை முன்னிட்டு துறையூர் பச்சைமலை பகுதியில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இ. ஆ. ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்கள், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்கள்.

தொடர்புடைய செய்தி