திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகநாதர் டீக்கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மூன்று இலக்க நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்த ரவிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.