திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி சேர்ந்தவர் லியாக்கத் அலி. இவர் கடந்த 19ஆம் தேதி தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மதிய உணவு சாப்பிட சென்றார். பின்னர் டூவீலர் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்தபோது அவரது டூவீலர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து தனது பைக் திருடு போனது குறித்து கொள்ளிடம் போலீசில் லியாக்கத் அலி நேற்று புகார் அளித்தார் அதன் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.