எட்டயபுரத்தில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி!

51பார்த்தது
எட்டயபுரத்தில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி!
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் எட்டையாபுரம்
தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்புரை செய்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் அஸ்ட்ரோ கிளப் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார். ஆசிரியை அன்புத்தாய், ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் ஜோசப் ஆசிர் அனைவரையும் வரவேற்றார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜானகி, பிரியா உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை எப்சி நன்றி கூறினார். இதேபோல் எட்டையாபுரம் வீரபாகு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஓம் சக்தி தலைமையில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவதுகுறித்தும் வானியல் குறித்தும் பயிற்சிஅளித்தனர்.

தொடர்புடைய செய்தி