எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலி- ஒளி காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சுவாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைக்கப்பட்ட ஒளிரும் வண்ண விளக்குகளை இயக்கி வைத்து, பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் மு. பெ. சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழி காவ லர்கள், தமிழ் அறி ஞர்கள் ஆகியோரின் மணி மண்ட பங்களில் ஒளி- ஒலி காட்சி அமைக்க தமிழ்நாடு முதல் -அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதன்படி பரிட்சாத்த முறையில் 6 மணிமண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.