ECR சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம்!

79பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ சண்முகபுரம் ECR சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதிகாரிகள் வேகத்தடை அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்ககாத காரணத்தினால் தொடர்ந்து இப்பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, கீழ சண்முகபுரம் ECR சாலையில் விபத்தில் ஏராளமான உயரிழந்த நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்திலும் 4 பேர் பலியான சம்பவத்தையடுத்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வேகத்தடை அமைப்பதற்கு வலியுறுத்தியும் தற்போது வரை வேகத்தடை அமைக்காத காரணத்தினால் கீழ சண்முகபுரம் கிராம மக்கள் திடீரென ECR சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டதோடு 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி