கோவில்பட்டி: வரி செலுத்துவதில் ஓய்வூதியா்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

71பார்த்தது
கோவில்பட்டி: வரி செலுத்துவதில் ஓய்வூதியா்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே ஓய்வூதியர்களின் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் அருமைராஜ் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 

சங்க செயலர் தங்கவேலு உள்ளிட்டோர் பேசினர். எட்டாவது ஊதியக் குழுவை உடனடியாக அமைப்பது, ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு அளித்த சலுகைகளை மீண்டும் வழங்குவது, பென்ஷன் விதிகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஓய்வூதியர் சங்க மகளிர் அணி தலைவி பட்டம்மாள் வரவேற்றார். சங்க உறுப்பினர் நாராயணன் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you