வேப்ப மரங்கள் நடுவதற்கு கிராம மக்களுடன் MLA மார்கண்டேயன் ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி கெச்சிலாபுரம், இராமச்சந்திராபுரம், இராமநாதபுரம், P. கெச்சிலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வேப்ப மரங்கள் நடுவதற்கு கிராம மக்களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆலோசனை மேற்கொண்டார்கள். மேலும் கிராமத்தில் அவர்களது சொந்த நிலங்களில் வேப்பமரத்தின் மூலம் விவசாயம் செய்வதற்கு ஆலோசனை வழங்கி கிராமத்தின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.