தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி, பால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைபுதிய மேம்பாலாம் வழியாக இன்று அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்ற பால் லோடு வேன் பாலத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த தண்ணீரில் லாரி மோதி விபத்தானது. இதில் நூறுக்கும் அதிகமான லிட்டர் பால் ரோட்டில் கொட்டி வீணானது.
விபத்தில் காயமடைந்த டிரைவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்