தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் போக்குவரத்து துறையில் மேற்பார்வையாளராகவும் மற்றும் துறைமுக ஆணைய குழு உறுப்பினராகவும், பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன் மற்றும் சுமித்ரா பாலகிருஷ்ணன் ஆகியோர் புதல்வன் செல்வன் சுகந்தன் தற்போது பெங்களூரு ஜெயின் காலேஜ் ஆப் யூனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவருடைய சகோதரி சஹானா பிரபல உயரம் தாண்டும் வீராங்கனை ஆவார்.
தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் பயின்று வரும் இவர் தமிழகத்தின் சார்பாக தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கத்தினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுகந்தன் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் முதலிடமும் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் கர்நாடக மாநிலம் ஜெயின் கல்லூரி சார்பாக பங்கு பெற்று மூன்றாம் இடமும் பிடித்து நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.