தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படும் விழாக்களின் முதன்மையானது சித்திரை திருவிழாவாகும் இந்த சித்திரை திருவிழா கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது இதையொட்டி ஆலயத்தில் அபிஷேக மண்டபத்தில் சுவாமி அம்பாள் விநாயகர் முருகப்பெருமான் ஆகியோர் எழுந்தருளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஊர்வலமாக சுவாமி அம்பாள் விநாயகர் முருகப்பெருமான் எடுத்துவரப்பட்டு அங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் விநாயகர் முருகப்பெருமானும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பாகம்பரியாள் சங்கர ராமேஸ்வரரும் எழுந்தருளினர்
பின்னர் குதிரை புலி ஆட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை சண்டை மேளம் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய தமிழர் கலைகள் அணிவகுக்க தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்பு முதலில் சின்ன தேரும் பின்னர் பெரிய தேரும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.