தூத்துக்குடி: இறால் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி; மீன்வளக் கல்லூரி அழைப்பு

65பார்த்தது
தூத்துக்குடி: இறால் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி; மீன்வளக் கல்லூரி அழைப்பு
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன் வளர்பியல் பள்ளியின் கீழ் இயங்கி வரும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளம், தூத்துக்குடியில் வருகின்ற 15. 10. 2024 அன்று "வனாமி இறால் வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் இறால் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப வகுப்புப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 300/- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5. 00 மணிக்குள் தங்களது பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி - 628 008. தொலைபேசி எண்: 0461-2277424, அலைபேசி எண்: 9994450248. இத்தகவலை மீன்வளக்கல்லூரி மற்றும ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி