தூத்துக்குடி: தெற்கு பீச் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

58பார்த்தது
தூத்துக்குடி: தெற்கு பீச் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என 40-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெ. ரிக்டா ஆர்தர் மச்சாது கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "40-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு பீச் ரோடு மாதா கோயில் முன்பு அனைவரும் இரண்டு கடைகள் மற்றும் பந்தல் அமைத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகமாக மாதா கோயிலுக்கு வரும்போது இந்தக் கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. 10-அடி மெயின் ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கடை முன்பு விட்டு செல்கிறார்கள். 

இதனால் பழைய துறைமுகத்திற்கு செல்லும் லாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இல்லத்திற்கு செல்லும் வழியும் இதுதான் எனவே இதனால் விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இதுவரை கடை உரிமையாளர்கள் மாநகராட்சியில் எந்த அனுமதியும் பெறவில்லை எனவே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி