காந்தி ஜெயந்தி: மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி.,

71பார்த்தது
தூத்துக்குடி காந்தி ஜெயந்தி முன்னிட்டு பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு இன்று (அக்.,2) பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கதர் அங்காடி மையத்தில் தீபாவளி சிறப்பு கதர் பொருட்கள் விற்பனையை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் தலைவர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு கதர் அங்காடி சார்பில் ஒரு கோடியே 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அந்த விற்பனையை எட்டும் வகையில் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி