தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தொடரும் சாலை விபத்துகள் வேகத்தடை மற்றும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடந்த ஆறு மாத காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து வருகிற 27ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறயுள்ளது.
தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் சாலையில் முத்தையாபுரம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் இந்த பகுதியில் சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததாலும் முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே முத்தையாபுரம் பல்க் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் மேலும் அந்தப் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த ஆறு மாத காலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வேகத்தடை மற்றும் சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.