தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் ஆறு நாட்டிகள் மைல் தொலைவில் சென்று ஆழ் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் பணியில் நாட்டு படகுகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த தொழிலை நம்பி சுமார் 3000 தொழிலாளர்கள் உள்ளனர் மேலும் இவர்களை நம்பி 5000 குடும்பங்கள் உள்ளன
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சங்குகுழி மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்கள் கடல் பகுதியில் புயல் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சங்கு குழி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக சுமார் 3000 தொழிலாளர்கள் மற்றும் 5000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
எனவே ஒரு தலைப்பட்ச்சமாக மீன்வளத்துறை செயல்படுவதை கண்டித்து உடனடியாக மீன்வளத்துறை தங்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மீன்வளத் துறை மற்றும் தமிழக அரசு கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாதிக்கப்பட்ட சங்குகுழி மீனவர்கள் தெரிவித்தனர்