தூத்துக்குடி: மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

65பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ள திரவிய ரத்தின நகரில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த பகுதியில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் தற்போது மாநகராட்சி சார்பில் குப்பைக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து திரவிய ரத்தின நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்கனவே கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி சுகாதாரசீர்கேடு உருவாகியுள்ளது. இவ்வாறு இருக்கும்போது தற்போது குப்பைக் கிடங்கு அமைத்தால் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும் எனவே தங்கள் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்கள் பகுதியில் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி