பக்ரீத் பண்டிகை; தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு தொழுகை!

72பார்த்தது
தூத்துக்குடி பக்ரீத் திருநாளை முன்னிட்டு லூர்தம்மாள் புரம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
இஸ்லாமியர்கள் உலகில் அன்பு சகோதரத்துவம் வேண்டி மஸ்ஜித் ரஹ்மான் தொழுகை திடலில்சிறப்பு தொழுகை நூற்றுக்கணக்கான ஆண் பெண் இஸ்லாமியர்கள் பங்கேற்பு


இறைதூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆகும் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி லூர்த்தம்மாள் புரத்தில் உள்ள மஜித் ரஹ்மான் தவ்ஹீத் ஜமாத் தொழுகை திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண் பெண் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலகம் முழுவதும் அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டியும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்

இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர் இதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்கின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி