தூத்துக்குடி: நீதிமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

81பார்த்தது
தூத்துக்குடி: நீதிமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் எந்நேரமும் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். 

அதன்படி நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வருபவர்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கட்டாயமாக முறையில் சோதனை செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்குள் தேவையில்லாமல் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு வரும் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கண்டிப்பாக ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்கு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், அவ்வப்போது நீதிமன்றத்தின் உள்ளேயும் சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் எவரும் இருக்கின்றனரா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகங்களில் பின்புறமும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியினை மேம்படுத்த வேண்டும் என எஸ்பி உத்தரவு விட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி