தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெண்கள் ஒருவருக்கொருவர் முந்தி சென்று நலத்திட்ட உதவிகளை வாங்கிய போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் சி. த.
செல்லபாண்டியன் கலந்து கொண்டு 10 லட்ச ரூபாய் மதிப்பில் 3000 பேருக்கு தையல் இயந்திரம், சைக்கிள், கிரைண்டர், வேஷ்டி சேலைகள், மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் ஒருவருக்கொருவரை முந்தி சென்றனர் மேலும் அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது ஏறியும் விழா பொதுக்கூட்ட மேடையில் ஏறியும் பெண்கள் ஒருவர் முந்தி சென்றனர் மேலும் அந்தப் பகுதியில் சேர்கள் சிதறி கிடந்ததால் அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.