அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

68பார்த்தது
தூத்துக்குடியில் தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த அனல் மின் நிலையம் மூலம் ஐந்து யூனிட்டுக்களில் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 13, தேதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட ஒன்று முதல் மூன்று யூனிட்டுகள் பகுதிக்கு கடல் நீர் உள்ளே கொண்டு செல்லும் கால்வாயில் சுவர் ஒரு பகுதியில் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக அந்த கால்வாயில் சாம்பல் கழிவுகள் உள்ளே புகுந்து கடல் நீர் உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக முதலாவது இரண்டாவது மூன்றாவது ஆகிய யூனிட் களில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 15 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை ஒரு வார காலம் சுமார் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது தடைபட்டுள்ளது.


அனல் மின் நிலைய அதிகாரிகள் சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தப் பணி கால தாமதமாக நடைபெறுவதால் மின் உற்பத்தி துவங்க இன்னும் பத்து தினங்களுக்கு மேலாகும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு ஆறு மாதத்திலேயே இந்த காம்பவுண்ட் சுவர் விழுந்த சம்பவம் அனல் மின் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்தும் அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி