மின்சார வாரியத்தில் 50, 000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

50பார்த்தது
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மின்வாரிய பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் சம்பத்குமார், மாநில துணைத்தலைவர் கீர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மின்சாரவாரியத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள சுமார் 50, 000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். துவக்க நிலை பதவியான தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளை டிப்ளமோ படித்த பொறியாளர்களை கொண்டு நேரடி நியமனம் செய்திட வேண்டும். கடந்த 1. 12. 2023 முதல் மின்சார வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.

புதிதாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்கள் ஆளில்லா துணை மின் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த துணை மின் நிலையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி