திருச்செந்தூர் கடற்கரையில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

83பார்த்தது
திருச்செந்தூர் கடற்கரையில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி அம்பிகா (46), கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் இறந்துவிட்டார். 

அம்பிகா தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்த அம்பிகா, அன்று இரவு கடற்கரையில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஜனவரி 1) இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி