திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 7தேதி அன்று நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு எஸ்பி ஆல்பர்ட் ஜான் திருச்செந்தூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் பக்தர்கள் மீது புனித நீரை தெளிப்பதற்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை பார்வையிட்டு குடமுழுக்கு நிகழ்வை நேரலையில் காண்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள LED திரையினை ஆய்வு செய்தார்.