தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஊருக்கு வடபுறம் உள்ள கடற்கரையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ வீதம் 82 மூடைகளில் இருந்த பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கடத்த முயன்ற மர்ம நபர்கள் படகுடன் தப்பித்துச் சென்று விட்டார்கள். அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.