விடுமுறை தினம்: திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

275பார்த்தது
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!
வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


வாரவிடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். பின்னர் இலவச தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனத்தில் சுமார் ரூ. 3 மணி நேரம் காத்திருத்து முருகபெருமானை தரிசித்தனர். பெரும்பாலான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்.


கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலையில் உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி