தூத்துக்குடியில் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரது படகு கடலில் மூழ்கிய நிலையில் அருகே இருந்த படகுமூலம் மீனவர்கள் தப்பிய நிலையில் மூழ்கிய படகை கரைக்கு இழுத்து வருகின்றனர்
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து அந்தோணி ராஜ் என்பவரது விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிக்க கடந்த ஒன்றாம் தேதி சுமார் 6 மீனவர்கள் சென்றுள்ளனர் இவர்கள் நடுக்கடல் பகுதியில் திருச்செந்தூருக்கு கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென படகில் ஏற்பட்ட பழுது காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து விசைப்படகு மூழ்கத் துவங்கியுள்ளது
இதை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களை தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் காப்பாற்றி தங்கள் விசைப்படகில் ஏற்றியதுடன் படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பத்திரமாக தங்கள் படகில் ஏற்றி உதவி உள்ளனர் இதைத் தொடர்ந்து மூழ்கிய படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு பத்திரமாக இழுத்து வரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்