தூத்துக்குடி: முதியவரிடம் ரூ. 40. 22 லட்சம் மோசடி; மேலும் 4 பேர் கைது

52பார்த்தது
தூத்துக்குடி: முதியவரிடம் ரூ. 40. 22 லட்சம் மோசடி; மேலும் 4 பேர் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ. 40.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரிடம், செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி, ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950 ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் சென்னையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தர்மபுரி தோழனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (27), விழுப்புரம் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஆனந்த் (27), சேலம் பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிராம் மகன் சந்தோஷ்ராஜ் (22), கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் அப்பாஸ் (25) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி