திருப்பூரைச் சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் 9 பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருச்செந்தூர் கோயிலுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் ஆறுமுகனேரிக்கு வந்தடைந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிர்புறம் உள்ள ஆடியோ கடையின் படிக்கட்டில் ஏறி, கோழிக்கடை ஷட்டரை உடைத்துக் கொண்டு அடுத்துள்ள ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில், காரில் இருந்த சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை ஆறுமுகனேரி போலீசார் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.