தூத்துக்குடி: கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை

78பார்த்தது
தூத்துக்குடி: கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் மகன் சிவபெருமாள் (38). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் வீடு மற்றும் பல்வேறு கட்டிடங்களை ஒப்பந்த அடிப்படையில் கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்தார். 

இவருக்கு சக்தி பிரியா என்ற மனைவியும் முரளிதரன், லத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். முன்தினம் காலையில் வீட்டில் இருந்து கந்தபுரத்திற்கு கோவில் வேலை நடப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், காலையில் நீண்டநேரமாகியும் அவர் வேலை ஆட்களுடன் கந்தபுரத்திற்கு செல்லாததால், செல்லேபானில் தொடர்பு கொண்டுள்ளனர். செல்லேபான் வீட்டில் இருந்துள்ளது. இதை தொடர்ந்து குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை தேடியுள்ளனர். 

நீண்டநேர தேடுதலுக்கு பின்னர், மாலை 3 மணி அளவில் காயல்பட்டினம் தைக்காபுரம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதாக ஆடு மேய்த்தவர்கள் வீட்டிற்கு தகவல் சொல்லியுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி