தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது

67பார்த்தது
தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது
தூத்துக்குடியில் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சீருடைகள், பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. பள்ளிக்கு செல்வதற்கான பொருட்களை வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளில் பெற்றோர் குழந்தைகளுடன் குவிந்தனர்.

அந்த வகையில், தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பென்சில், பேனா, பாக்ஸ், ரப்பர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்கிச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி