தூத்துக்குடி: சந்தாதாரர்களுக்கு மானியத்துடன் ஹெச்டி செட்டாப் ஃபாக்ஸ்

62பார்த்தது
தூத்துக்குடி: சந்தாதாரர்களுக்கு மானியத்துடன் ஹெச்டி செட்டாப் ஃபாக்ஸ்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2025 பிப்ரவரிக்குள் 25 லட்சம் புதிய இணைப்புகளை பெற வேண்டும். மேலும் விரைவில் ஒரு கோடி இலக்கை அடைய வேண்டும். என்பதற்காக அரசு கேபிள் டிவி சேவையை விரிவுபடுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு புதிய திட்டங்களை, சலுகைகளை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். 

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு மானிய விலையில் நவீன தொழில்நுட்பத்தில் உள்ள ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

விழாவிற்கு டிஜிட்டல் சிக்னல் விநியோகிஸ்தர் சாத்தான்குளம் டி.ஜே. கென்னடி தலைமை தாங்கினார். விழாவிற்கு வருகை தந்தவர்களை அரசு கேபிள் டிவி நிறுவன தொழில்நுட்ப உதவியாளர் ச. விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் (தனி வட்டாட்சியர்) எம். ராஜலட்சுமி, அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டரும், கென்ஸ் கேபிள் விஷன் உரிமையாளருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடியிடம் ஹெச்டி செட்டாப் பாக்ஸை வழங்கி தொடங்கி வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி