தூத்துக்குடியில் மே 13 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: தகவல்

50பார்த்தது
தூத்துக்குடியில் மே 13 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: தகவல்
தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்படி, 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.05.2025 அன்று காலை 11 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுள்ளது.

எனவே, தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கோட்டாட்சியர் ம.பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்."

தொடர்புடைய செய்தி