ஸ்ரீவைகுண்டம் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்

688பார்த்தது
ஸ்ரீவைகுண்டம் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் திருப்பணிகளை சிறப்பாக செய்து கோயில்களை மேம்படுத்திடும் பொருட்டு அறங்காவலர் குழு அமைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இதன்படி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள மொத்தம் 40கோயில்களில் முதல் கட்டமாக 24கோயில்களுக்கு அறங்காவலர் குழுவினை நியமிப்பதற்கான நேர்காணல் கடந்த மார்ச் மாதம் கோயில் ஆய்வாளர் நம்பி தலைமையில் நடைபெற்றது.   இதனைத்தொடர்ந்து தற்போது இக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஆன்மிக சிறப்புபெற்ற கொங்கராயக்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் சிவன் கோயிலுக்கு அறங்காவலராக தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறங்காவலர் நியமன கடிதத்தினை தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பார்த்திபன் கோயில் அறங்காவலர் தியாகராஜனிடம் வழங்கினார். இதில், கோயில் ஆய்வாளர் நம்பி, கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் இசக்கிபாண்டியன், கோயில் அர்ச்சகர் குணசேகரன், சமூக ஆர்வலர் கல்லைசிந்தா, திருக்கோயில் பணியாளர்கள் முருகானந்ததாஸ், விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோன்று, விட்டிலாபுரம் விக்னேஸ்வரர் சிவன் கோயில் அறங்காவலராக கோமதியும், செய்துங்கநல்லூர் வியாக்ரபதீஸ்வரர் சிவன் கோயில் அறங்காவலராக மாரியப்பன் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி