அக்னிவீரர் பிரிவுகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் பல்வேறு பிரிவுகளில் ஆள்சேர்ப்புக்கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் சேர விருப்பமுள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதில் அக்னிவீரர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், அக்னிவீரர் டிரேட்ஸ்மேன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் https://164.100.158.23/eligibility-criteria-for-agniveer-recruitment-process.htm என்ற ராணுவ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.