தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர், கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் மனைவி கனி (38). இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கனிக்கு 2018 ஆம் ஆண்டு வயிற்றில் புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வயிறு வலிப்பதாக கூறி சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் வீட்டின் கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவன் மற்றும் பிள்ளைகள் வந்து பார்த்த பொழுது எரிந்த நிலையில் விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்