சங்கரலிங்கபுரம் அருகே சேலை சக்கரத்தில் சிக்கியதால் பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே உள்ள கீழ கல்லூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சித்தம்மாள் (70), இவர் இன்று காலை காட்டு வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது தனது உறவினரின் ஒருவரின் பைக்கில் பின்னார் அமர்ந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது சேலை, பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாகலாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சங்கலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.