தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கர பேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3வது தெரு பகுதியில் இரவு 7 மணி அளவில் ஏழு அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று தெருவில் சென்றுள்ளது இதைக்கண்ட அந்தப் பகுதியில் சென்ற பொது மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள் சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் இதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அந்த நல்ல பாம்பை ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி லாவகமாக பிடித்தனர் இதைத் தொடர்ந்து அந்த நல்ல பாம்பை வனத்துறைகளிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அந்த பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் விட்டனர் தங்கள் தெருவில் திடீரென பாம்பு வந்ததை கண்ட மக்கள் உடனே தீயணைப்புத் துறையினர் பிடித்து சென்றதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.