தூத்துக்குடி தாளமுத்து நகர், சுனாமி காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் இசக்கிமுத்து (58), இவர் இன்று இரவு 8 மணி அளவில் தனது மருமகன் பைக்கில் பின்னால் அமர்ந்து தாளமுத்து நகர் பஜாருக்கு வந்து கொண்டிருந்தனர். சிலுவைப்பட்டி ரோடு அழகாபுரி அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் லாரிக்குள் சிக்கிய இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மருமகன் காயம் இன்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுத்து உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.