துணை மின் நிலையம் அருகே காட்டு தீயால் பனை மரங்கள் சேதம்.

54பார்த்தது
துணை மின் நிலையம் அருகே காட்டு தீயால் பனை மரங்கள் சேதம்.
ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் தனியார் துணை மின் நிலையம் அருகே காட்டு தீயால் பனை மரங்கள் சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்திலிருந்து முறம்பன் செல்லும் சாலை பகுதியில் தனியார் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்திற்கு கிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் வைக்கப்பட்ட தீயால் பலத்த காற்றின் காரணமாகவும் அப்பகுதியில் இருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சேதம் நாசமாகி உள்ளது.

தீ விபத்து குறித்து மணியாச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி