தூத்துக்குடி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தந்தை கைது

71பார்த்தது
தூத்துக்குடி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தந்தை கைது
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் போத்திநாராயணன் (43). இவர், கல்லூரியில் பயிலும் தனது 18 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி