தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், உடன்குடி அனல் மின் நிலையப் பணிகள், சர்வதேச அறைகலன் பூங்கா, தாமிரபரணி நதியினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம், வெள்ளத் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (29.12.2024) தூத்துக்குடியில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.